search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராவிட கட்சிகள்"

    நாட்டில் உள்ள சர்வ கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2019-ல் மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrisnan #PMModi
    கரூர்:

    கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கார் வேந்தன் முன்னிலை வகித்தார். இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    4 ஆண்டுகள் எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தாத எதிர்கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜ.க. மீது ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மாதம் ஒரு ஊழல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. ஆனால் ஒரு ஊழல் கூட செய்யாத பா.ஜ.க. ஆட்சி மீது பொய்குற்றச்சாட்டினை வைக்கிறார்கள்.

    சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் தவிர்த்து, நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான அய்யப்ப சுவாமி கோவில்களுக்கு பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    எந்த காலத்திலும் நமது வாழ்க்கை முறையில் பெண்களை ஒதுக்கவில்லை. அய்யப்ப சுவாமி கோவில் அமைந்திருக்கும் காட்டுப் பகுதி, சுயகட்டுப்பாடு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மத நம்பிக்கைகளை தகர்க்க கம்யூனிஸ்டு கட்சிகள் எண்ணுகிறது. அதற்கு காங்கிரஸ் துணை போகிறது.

    50 ஆண்டு திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறவில்லை. மக்கள் கேட்காத இலவசங்களையும், டாஸ்மாக் மது பானங்களையும் கொடுத்து மக்களை ஒரு வித மோகத்தில் வைத்து ஆட்சி செய்கிறார்கள். ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க-காங்கிரஸ் கட்சிக்கு மானமுள்ள தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என பல்வேறு அரசியல் கட்சிகள் கற்பனையில் இருக்கின்றன. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், நாட்டில் உள்ள சர்வ கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2019-ல் மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrisnan #PMModi
    தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று அன்னதானம் நடந்தது.

    இதனை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து மதத்திற்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தவிர்க்க வேண்டும். மத ஊர்வலத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தி என் தலைமையின்கீழ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடைப்பெறுகிறது.

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன.

    மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்லி தேர்தலை சந்திப்போம்.

    மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை பொதுக்குழுவில் கடுமையாக சாடியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். பா.ஜனதா இதற்கு வெகுவிரைவில் பாடம் புகட்டும்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். #BJP #HRaja
    தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள் என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மக்கள் நீதிமய்யம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு நடிகை ஸ்ரீபிரியா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானலும் வரலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் யாரை நம்புகின்றனர் என்பதுதான் முக்கியம்.

    தமிழகம் இனியாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தந்தனர். தற்போது திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும். எனவே வாக்குகளை தயவு செய்து விற்க வேண்டாம். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள்தான். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கைக்கும், வெற்றிக்கும் தொடர்பு இல்லை. அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகூட பல சமயங்களில் டெபாசிட் இழந்து வருகிறது.

    ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்தபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். அவர் எனக்கு நல்ல நண்பர். இருந்தபோதும் நட்பு வேறு, கொள்கை வேறு.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தமிழக மக்கள் வளர்ச்சியில் திராவிட கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் எச்.ராஜா பேசினார்.#BJP #HRaja
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் எச்.ராஜா பேசும் போது கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தருவோம் என்று வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றியுள்ளோம். நாடு முழுவதும் 30 கோடி ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

    7 கோடி வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. நிலையான ஆட்சி இருந்தால் மட்டுமே இது போன்ற சாதனைகள் சாத்தியமாகும்.

    தற்போது சினிமாவில் ஓய்வு பெற்ற நடிகர்கள் முதல்வர் கனவில் உள்ளனர். அவர்கள் இளைஞர்கள் சிலரை வசப்படுத்தி தீய செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். அவர்கள் பின்னால் இளைஞர்கள் செல்ல வேண்டாம்.

    தமிழகத்தில் மக்கள் நலனில் திராவிட கட்சிகளுக்கு ஒரு போதும் அக்கறை இருந்ததில்லை. தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. உள்ளாட்சிகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தராத நிலையில் சொத்து வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனை திரும்ப பெற வேண்டும்.


    மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு ஏரி கால்வாய்களை தூர் வாராததால் அணையின் நீர் வீணாகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வருமான வரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறது. அதன்படிதான் தமிழக அரசுடன் நட்பாக உள்ளது. இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja
    திராவிட கட்சிகளால் தமிழகத்துக்கு முன்னேற்றம் இல்லை என்று விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி சார்பில் சமதர்ம எழுச்சி மாநில மாநாடு நடைபெற்றது.

    எஸ்.சி.அணியின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சி. அணி மாநில பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி 6 கோடி கழிவறைகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதில் சரிபாதி கழிவறைகள் பட்டியல் இன குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது.

    இவர்களுக்கு கழிவறை கட்டிக்கொடுக்க திராவிட கட்சிகள் ஏன் முன்வரவில்லை? குறைந்த பட்சம் பள்ளிக்கூடங்களிலாவது கழிவறைகள் கட்டி கொடுத்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை. இந்த துரோகம் செய்த கழகங்கள் தான் நமது சமுதாயத்தை உயர்த்துவார்கள் என்று கனவு கண்டால் அது நடக்காது.

    தமிழகத்தில் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1½ கோடி கியாஸ் இணைப்புகள் பட்டியல் இன மக்களுக்காக மோடி கொடுத்துள்ளார். ஆனால் திராவிட கட்சிகள் எதையும் செய்யவில்லை. மோடியின் ஆட்சியில்தான் மக்கள் உயர்வை கண்டு வருகிறார்கள். இளைஞர்கள் படிப்புடன் தொழில் தொடங்க முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதில் 40 சதவீதம் பட்டியல் இன மக்களுக்காக கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நாம் வளர்ந்து காட்டுவது. தற்போது சிந்தை அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் மிகப்பெரிய பிரிவு ஏற்பட்டுள்ளது. திராவிட கழகங்களின் செயல்பாடுகள் கலவரங்களை ஏற்படுத்துவதற்கும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கும் வழிவகுக்கும் வகையில் உள்ளது.

    தமிழர்களை காப்பதிலும், பட்டியல் இன மக்களை உயர்த்தி காட்டுவதிலும் மோடி அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இன்று ஒரு புறத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. உண்மையான எதிர்க்கட்சி என்றால் பா.ஜ.க.தான். வருகிற தேர்தல் கொள்கை, கோட்பாடு, சிந்தனை அடிப்படையிலும், வளர்ச்சியை கொடுக்கக்கூடிய தேர்தலாகவும் நடைபெற உள்ளது.

    அனைத்து சமூகமும் ஒன்று பட்டு நின்றால்தான் தமிழகம் முன்னேறும், தமிழ் சமுதாயம் முன்னேறும்.

    வரும் ஆண்டில் சுவாமி சகஜானந்தரின் 130-வது ஆண்டு பிறந்தநாள் விழா பட்டியல் இன மக்களின் வளர்ச்சி விழாவாக கொண்டாடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    அம்பேத்கருக்கு உண்மையாக புகழ் சேர்க்கும் ஒரே கட்சி பா.ஜனதாதான். இதை ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி நிரூபித்து வருகிறார். இந்த சமுதாயம் உயர்த்தப்பட வேண்டுமானால் தமிழக மக்கள் பா.ஜனதாவுக்கு அங்கீகாரம் தர வேண்டும். இந்த சமூகத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக கூறும் திருமாவளவன் போன்ற சமூக தலைவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். இந்த மக்களுக்காக உதவி செய்யும் வகையில் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தீர்களா? ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் என்னென்ன திட்டங்களைகொண்டு வந்தோம் என்பதை எங்களால் பட்டியல் இட முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் காவிரி நமக்கு கிடைத்துள்ளது. காவிரிக்காக மு.க.ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் பொய்யான தோற்றம்தான். தமிழகத்தில் பா.ஜ.க.வால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும். எந்த ஒரு திட்டமானாலும் அது மக்களுக்கு எதிரான திட்டமாக இருந்தால், அதை பா.ஜ.க. ஒத்துக்கொள்ளாது. தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும் காலம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×